நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆடவர் அடித்து கொலை: ஐவர் கைது 

செமினி: 

தாமான் பெலாங்கி செமினியில் ஆடவரை அடித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 22 முதல் 52 வயதுடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் இன்று அதிகாலை 2.05 மணிக்குச் செமினி, பெரானாங் பகுதியில் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 25 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முஹம்மத் ஜைட் ஹசான் கூறியுள்ளார். 

நேற்றிரவு 9.20 மணியளவில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின்படி, புரோட்டான் சாகா காரை ஓட்டி வந்த 42 வயதான ஆடவர்குடியிருப்பு பகுதியின் வேலியில் மோதி விபத்துக்குள்ளானார்.

பாதிக்கப்பட்ட நபர் சந்தேக நபரால் காரிலிருந்து இழுக்கப்பட்டு அடிக்கப்பட்டுள்ளார். பின் கைகள் கட்டப்பட்டு, அவரது காருக்கு அருகில் சாலையில் கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்ததை உறுதி செய்தனர். 

புக்கிட் அமான் தடயவியல் குழு சம்பவ இடத்தில் கைரேகைகள், இரண்டு பச்சை மற்றும் பழுப்பு கயிறுகள் உட்பட பல இரத்த மாதிரிகளை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்துத் தப்பியோட முயற்சித்துள்ளார். பொதுமக்களால் துரத்தப்பட்டதால் அவர் வேலியில் மோதினார். 

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset