செய்திகள் மலேசியா
தாப்பா ஶ்ரீ மகா மங்கள மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
தாப்பா:
தாப்பா, கம்போங் பகாங், ஸ்ரீ மகா மங்கள மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் இவ்விழாவிற்கு தலைமையேற்றார்.
சுமார் அறுபது ஆண்டுகள் தொன்மை வாய்ந்த ஆலயமாக இது விளங்குகிறது.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா ஆகம விதிப்படி வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
அம்மனின் திருவருளால் சைவநெறி தழைத்தோங்க சமய பரப்புரையிலும் சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆலய பொறுப்பாளர்கள் தொடர்ந்து ஆன்மீக பணியாற்ற வேண்டும்.
மேலும் மேன்மை கொள் சைவநீதி நிலைக்க திறந்த மனத்தோடும், உள்ளன்போடும் நம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.
இதன் மூலம் சைவ நெறி தழைத்தோங்கும் டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm