செய்திகள் மலேசியா
நீலாயில் மனைவி, மகள்கள் இறந்து கிடந்தனர்: கணவர் கைது
சிரம்பான்:
மனைவி, மகள்கள் இறந்து கிடந்த சம்பவத்தில் 30 வயதுடைய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனை நீலாய் போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹசிம் கூறினார்.
நீலாய், லெங்கேங்கில் உள்ள வீட்டில் மூவர் இறந்து கிடந்ததாக கூறி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இரவு 9.25 மணிக்கு போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்தில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்தனர்.
சம்பவ இடத்தில் தற்கொலை டொடர்பான கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் சடலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சவபரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் அதிகாலை 1 மணிக்கு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm