நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாயில் மனைவி, மகள்கள் இறந்து கிடந்தனர்: கணவர் கைது

சிரம்பான்:

மனைவி, மகள்கள் இறந்து கிடந்த சம்பவத்தில் 30 வயதுடைய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை நீலாய் போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹசிம் கூறினார்.

நீலாய், லெங்கேங்கில் உள்ள வீட்டில் மூவர் இறந்து கிடந்ததாக கூறி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இரவு 9.25 மணிக்கு போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சம்பவ இடத்தில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்தனர்.

சம்பவ இடத்தில் தற்கொலை டொடர்பான கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களின் சடலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சவபரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாலை 1 மணிக்கு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset