நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல்டு 1 எண் பட்டை மாமன்னருக்கு சொந்தமானது 

கோலாலம்பூர்:

சிறப்பு வாகன எண் பட்டையான கோல்டு 1 மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு சொந்தமானது.

போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் அந்த எண் பட்டையை மாமன்னரிடம் இன்று ஒப்படைத்தார்,

மாமன்னர் இந்த எண் பட்டை 1.5 மில்லியன் ரிங்கிட்டுற்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

இது வரை நாட்டில் அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட எண் பட்டை இதுவாகும்.

இந்த 1.5 மில்லியன் ரிங்கிட் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என மாமன்னர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 50ஆவது கூட்டரசு பிரதேச தின பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த எண் பட்டை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset