செய்திகள் மலேசியா
கோல குபு பாரு வேட்புமனு தாக்கல் சீராக நடைபெற்றது: மாநில போலிஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா தேவி
உலு சிலாங்கூர்:
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சீராக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில துணை போலிஸ் படைத் தலைவர் டத்தோ சசிகலா தேவி இதனை கூறினார்.
வேட்புமனுத் தாக்கல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 284 போலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அவர்களுக்கு உலு சிலாங்கூர் மாநகர சபையின் 15 ஊழியர்கள் உரிய உதவிகளை வழங்கினர்.
காவல்துறை, தேர்தல் ஆணையம் அமைத்த விதிகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.
இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
மேலும் வாக்களிக்கும் நாள் வரை போலிசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 10:32 pm
மலேசியா - சீனா இரு நாடுகளின் 50 ஆண்டு கால தூதரக உறவுகளின் வளர்ச்சி
May 8, 2024, 6:55 pm
மலேசியாவில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
May 8, 2024, 5:11 pm