செய்திகள் மலேசியா
மீன்வளர்ப்புத் தொழில்நுட்ப அறிவை வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மலேசியா தயார் - மாட் சாபு
கோலாலம்பூர்:
மீன்வளர்ப்பு தொடர்பான அறிவையும் தொழில்நுட்பத்தையும் பரஸ்பர நலனுக்காக வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மலேசியா தயாராகவுள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்தார்.
ஆசியாவிற்கான பிராந்திய மாநாட்டில் இருதரப்பு கலந்துரையாடல் அமர்வின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் கியு டோங்யுவிடம் மலேசியாவின் தயார்நிலை குறித்துத் தெரிவித்ததாக மாட் சாபு தனது முகநூலில் குறிப்பிட்டார்.
மலேசியாவில் மீன்வளர்ப்பு தொழில் சிறந்த உற்பத்தி செயல்திறன் கொண்ட ஒரு வேகமாக வளர்ந்து வரும் தொழில் என்று அவர் கூறினார்.
நாட்டின் விவசாயம் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பின் தங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், காலநிலை மாற்றத்தின் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானது.
மலேசியாவின் SMART விவசாய முயற்சியைப் பற்றியும் கியுவுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm