செய்திகள் மலேசியா
தெலுக் பாஹாங் தேசிய பூங்காவில் தொலைந்த பிரெஞ்சு சுற்றுலா பயணியைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
பாலிக் புலாவ்:
இன்று அதிகாலை தெலுக் பாஹாங் தேசிய பூங்காவின் வனப்பகுதியில் காணாமல் போன பிரெஞ்சு சுற்றுலா பயணியை மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட யூனேஸ் ஓவ்காலி ஏழு மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாகக் காணப்பட்டார்.
நபர் ஒருவர் காணாமல் போன தகவல் குறித்துத் தமது தரப்புக்கு இரவு 7.20 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தெலுக் பாஹாங் தீயணைப்பு நிலையத் தலைவர் ஃபைஸ் ஹெல்மி கூறினார்.
மீட்பு நடவடிக்கையில் 17 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
வாட்ஸ்அப் செயலியின் மூலம் பாதிக்கப்பட்டவர் பகிர்ந்த இருப்பிடத்தின் அடிப்படையில் மீட்புக் குழுவினர் தேடுதல் நடத்தினர்.
ஒரு மலைப்பாங்கான பகுதியில் கடும் மழையில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு மீட்புக் குழு அறிவுறுத்தியது.
பாதிக்கப்பட்டவர் அதிகாலை 1.22 மணியளவில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சம்பந்தப்பட்ட நபர் ஒரு வாரத்திற்கு முன்பு பினாங்குக்குப் பயண நிமித்தமாக வந்து நேற்று மதியம் தனியாக காட்டுப் பகுதிக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am