நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகாதீர் நலமுடன் இருக்கின்றார்: உதவியாளர் தகவல்

பெட்டாலிங் ஜெயா: 

துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் சுயநினைவுடன் இருக்கின்றார் என்றும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவரின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார். 

அவர் இன்னும் தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், அவர் உடல்நலம் குறித்துஏதேனும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தால் அது குறித்த தகவல் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். 

ஜனவரி 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பிறகு, நோய்த்தொற்றுக்காக தேசிய இருதய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து டாக்டர் மகாதீர் சிறிது நேரம் ஓய்வெடுப்பார் என்று பிப்ரவரி 13 அன்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹம்மத் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையின் போது அவரது உடல்நிலை வெளிப்பட்டது.

டாக்டர் மகாதீரின் வழக்கறிஞர், மியோர் நார் ஹைதிர் சுஹைமி, நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான விண்ணப்பத்தில், தனது மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset