நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் கடந்த ஆண்டு காசநோய் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்:

மலேசியாவில் கடந்த ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.47 விழுக்காடு அதிகரித்ததாக சுகாதார அமைச்சு கூறியது.

கடந்த ஆண்டு மலேசியாவில் 26,781 பேருக்குக் காசநோய் ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டில் 25,391 பேரும் 2021ஆம் ஆண்டில் 21,727 பேரும் அந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

காசநோயால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணத் தேவையான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதாக சுகாதார அமைச்சு கூறியது.

மலேசிய சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள உத்திகளின் விளைவாக காசநோயால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

காசநோய் பரவலைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

காசநோய் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று சுகாதார அமைச்சு கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset