செய்திகள் மலேசியா
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 42,000 கிலோ உடைத்த அரிசி பறிமுதல்
அலோர் ஸ்டார்:
அண்டை நாடுகளிலிருந்து 42,000 கிலோ எடையுள்ள உடைத்த அரிசி கடத்தல் நடவடிக்கையைச் சுங்கத் துறை முறியடித்தது.
இந்தக் கடத்தல் முறியடிப்பு நடவடிக்கை பிப்ரவரி 6-ஆம் தேதி போக்கோக் செனாவில் நடந்தது.
அலோர் ஸ்டார் அமலாக்கப் பிரிவு உறுப்பினர்கள் குழு, பொதுமக்களிடம் இருந்து தகவலைப் பெற்ற பின்னர், உள்ளூர் பதிவு எண் கொண்ட டிரெய்லரைக் கண்டுபிடித்தனர் என்று கெடா மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் நோர் இசா அப்துல் லத்தீஃப் கூறினார்.
டிரெய்லர் பிப்ரவரி 6-ஆம் தேதி டுரியான் பூரோங் சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தின் நுழைவாயில் வழியாக தாய்லாந்திலிருந்து நாட்டிற்குள் நுழைந்தது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அமலாக்க அதிகாரிகள் வாகனத்தை போக்கோக் செனா சாலையின் ஓரத்தில் நிறுத்தியப் பின் ஓட்டுநர் தப்பியோடியுள்ளார்.
மொத்தம் 42,000 கிலோ எடையுள்ள 840 சாக்கு உடைத்த அரிசி கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்டதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு 105,000 ஆகும் என்று அவர் கூறினார்.
மேலும் அதிக லாபம் ஈட்டுவதற்காக உடைத்த அரிசி உள்ளூர் அரிசி அல்லது இறக்குமதி செய்யப்பட்ட அரிசியுடன் கலக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am