நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காதலர் தினத்தில் கள்ள உறவு: பிள்ளைகளுடன் ஹோட்டலில் தங்கிய ஜோடி கைது

கூலிம்:

காதலர் தினத்தில் கள்ள உறவில் ஈடுபட முயன்ற ஜோடியை கூலிம் மாவட்ட மத இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த சம்பவம் லூனாஸில் உள்ள ஒரு தங்குவிடுதியில் நிகழ்ந்தது.

நான்கு, ஆறு வயதுடைய இரண்டு குழந்தைள், தனது காதலனுடன் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் தனித்து வாழும் தாய் ஒருவர் தங்கியிருந்தார்.

41 வயதான அப் பெண் தனது 43 வயது துணையுடன் காதலர் தினத்தை முன்னிட்டு கள்ள உறவில் ஈடுப்படவிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கூலிம் மாவட்ட மத இலாகாவின் நடவடிக்கை பிரிவு அதிகாரி அன்வார் ஷாரிபுடின் கூறினார்.

காதலர் தினத்தை முன்னிட்டு தகாத நடவடிக்கைகளை ஒழிக்கும் நோக்கில் 
ஓப்ஸ் காசே சாயாங் எனும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset