செய்திகள் மலேசியா
ஈப்போ தைப்பூச விழாவில் 5,69,261 ரிங்கிட் வசூல்: சீத்தாராமன்
ஈப்போ:
பேரா மாநிலத்தில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் இந்த ஆண்டு 5,69,261 ரிங்கிட் வசூலானது.
இதை ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் ஆர். சீத்தாராமன் கூறினார்.
பல்வேறு சரச்சையில் இருந்து மீண்ட ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் தைப்பூச விழாவை நடத்தி முடித்தது .
இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற மாநில அரசாங்கம் குறிப்பாக அதன் அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன், பொது மக்கள் வழங்கிய பேராதரவுக்கு சீத்தாராமன் நன்றியைக் கூறிக் கொண்டார்.
ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் மூலம் அதிகமான நிதி கிடைத்ததாகவும் அதன் மூலம் 1 லட்சது 30 ஆயிரத்து 400 ரிங்கிட் வசூலானது.
முடி காணிக்கை, பாலபிஷேகம் , தேங்காய் அர்ச்சனை வழி அதிகமான நிதி வசூலானதாக தெரிவித்தார்.
இன்று காலையில் பேரா மாநில அரசாங்க செயலகத்தில் சிவநேசனை சந்தித்த ஈப்போ இந்து தேவஸ்தான சபா நிர்வாக உறுப்பினர்கள் பின்னர் சிவநேசன் முன்னிலையில் இந்த தகவலை செய்தியாளர்களிடம் சீத்தாராமன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவநேசன், பல சிக்கலில் இருந்து மீண்ட ஈப்போ இந்து தேவஸ்தானம் தொடர்ந்து எந்த பிரச்னையிலும் சிக்காமல் முறையே நிர்வாகத்தை வழி நடத்தும்படி ஆலோசனை கூறினார்
பேரா மாநிலத்தில் செயல்படுகின்ற ஆலயங்கள் அதன் நிர்வாகத்தை சிறப்பான முறையில் நடத்த வேண்டும்.
சில ஆலயங்கள் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கு முறையே கணக்கு வழக்குகளை தக்கல் செய்யாததால் அதன் பதிவை ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளது கவலை அளிப்பதாகவும் குறிபிட்டார்.
ஆகவே ஆலயங்கள் அதன் விதிகளை முறைப்படி கடைப்பிடிக்கவேண்டும், சிவநேசன் கேட்டுக்கொண்டார்.
மேலும் , இந்த நாட்டு ருக்குன் நெகரா கோட்பாட்டிற்கு புறம்பாக செயல்படும் குறிப்பாக மதங்களுக்கு புறம்பாக செயல்படும் அமைப்புகளுக்கு அரசாங்க நிதி வழங்கப்படாது என்ற தகவலையும் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:16 pm
இந்து சமயம், ஆலயத்தை அவமதிப்பவர்களின் கொட்டத்தை கூட்டுப் பிரார்த்தனைகள் அடக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 3, 2026, 8:17 pm
அரச மன்னிப்பு அதிகாரம் என்பது அரசியல் பரிசு அல்லது தனிப்பட்ட அனுதாபம் அல்ல: பகாங் சுல்தான்
February 3, 2026, 8:08 pm
பயணியிடம் பாலியல் தொல்லை புரிந்த ஈ ஹெய்லிங் ஓட்டுநரின் உரிமம் உடனடியாக ரத்து: அந்தோனி லோக்
February 3, 2026, 6:03 pm
தாயைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர், சிலாங்கூர் மாநிலத்திற்குச் செல்லும் பேருந்தில் கைது
February 3, 2026, 5:55 pm
முன்னாள் காதலியின் மீது கோபம்: பெட்ரோல் ஊற்றி, வீட்டில் தீ வைத்து தாக்கிய நபர் கைது
February 3, 2026, 3:24 pm
நகராட்சி தேர்தல் அச்சுறுத்தல் அல்ல, மக்களின் அதிகாரம்: அம்னோ இளைஞர் பிரிவின் எதிர்ப்புக்கு டாப்ஸி பதில்
February 3, 2026, 2:54 pm
மத சகிப்புத்தன்மை, வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு ஆகியவை நல்லிணக்கத்தின் அடிப்படையாகும்: ஜாஹித் ஹமிடி
February 3, 2026, 11:14 am
