நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து சமயம், ஆலயத்தை அவமதிப்பவர்களின் கொட்டத்தை கூட்டுப் பிரார்த்தனைகள் அடக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

இந்து சமயத்தையும் ஆலயத்தையும் அவமதிப்பவர்களின் கொட்டத்தை கூட்டுப் பிரார்த்தனைகள் அடக்கும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.

நம் சமுதாயத்தில் ஆரம்பக் காலத்தில் கூட்டுப் பிரார்த்தனைகள் பரவலாக இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அது காணாமல் போய்விட்டது. 

இதனால் நமது இந்து சமயத்தின் மகத்துவம் பலருக்கு தெரியவில்லை. புரியவில்லை.

குறிப்பாக நம் மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் இந்து மதத்தையும் ஆலயங்களையும் அவமதித்து பேசி வருகின்றனர்.

இதுபோன்ற நபர்களின் கொட்டத்தை அடக்க கூட்டுப் பிரார்த்தனைகள் மிகவும் அவசியமானதாக உள்ளது.

நாம் வாழும் போது தேவாரம் பாடப்பட வேண்டும். நாம் வாழும் காலங்களில் நம் இல்லங்களில் திருமுறை ஓதப்பட வேண்டும்.

நம் வீடுகளில் புகுந்துள்ள மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

ஆங்காங்கே கூட்டுப் பிரார்த்தனைகளை  தொடங்க வேண்டும்.

இந்து சமயம், ஆலயம் தொடர்பாக 
நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு கூட்டுப் பிரார்த்தனையை தொடங்கிய டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset