செய்திகள் மலேசியா
இந்தியர்களின் விவகாரங்களை கவனிக்க மித்ராவின் கீழ் சிறப்பு பிரிவுகள்: பிரபாகரன்
கோலாலம்பூர்:
இந்தியர்களின் விவகாரங்களை கவனிக்க மித்ராவின் கீழ் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என்று அதன் சிறப்பு பணிக் குழு தலைவர் பி. பிரபாகரன் கூறினார்.
மித்ரா என்றாலே ஊழல், முறைகேடு என்ற நிலையாகி விட்டது. இந்த அவல பார்வையில் இருந்து மித்ராவை மீட்டெடுக்க வேண்டும். இது தான் எனது முதல் கட்ட நடவடிக்கையாகும்.
அதனைத் தொடர்ந்து மித்ரா பணிக் குழுவில் பலர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்களின் பணி தொடர்கிறதா அல்லது புதியவர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதை உறுதி செய்ய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மேலும் இந்திய சமுதாய உருமாற்ற திட்டங்களை மேற்கொள்வது தான் மித்ராவின் முக்கிய இலக்காகும்.
அதனால் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை மித்ராவால் கண்காணிக்க முடியாது.
ஆனால் என் தலைமையில் மித்ராவின் கீழ் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும்.
இதன் வாயிலாக இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் கல்வி, பொருளாதாரம், தமிழப்பள்ளி, அடையாள அட்டை, வேலை வாய்ப்பு ஆகிய பிரச்சினைகளையும் கண்காணிக்கும்.
இதுபோன்ற இலக்குகளை அடைய சமுதாய தலைவர்களும், மக்களும் எனக்கு ஒத்துழைப்பை தர வேண்டும் என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 26, 2025, 10:36 am
ஆதரவு கடிதத்தற்காக தான் ஷம்சுல் ராஜினாமா செய்தார்; பணம் வாங்கியதற்காக அல்ல: ங்கா
November 26, 2025, 10:35 am
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
