
செய்திகள் மலேசியா
சாலை பகடிவதை: சிங்கப்பூர் காரின் உரிமையாளரைத் தேடும் ஜொகூர் போலீஸ்
ஜொகூர் போலீஸ்
ஜொகூர்பாரு:
சாலையில் ஒரு காரின் கண்ணாடியை உடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட காரின் ஓட்டுநரை ஜொகூர் மாநிலக் போலீஸ்படையினர் தேடி வருகின்றனர்.
மலேசியாவின் வடக்கு-கிழக்கு விரைவுச்சாலையில் வடக்கே சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
இச் சம்பவம் பதிவானதாகக் கருதப்படும் 54 வினாடிக் காணொலியை முகநூல் பயனர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
அந்தக் காணொலி குறைந்தது 26,000 முறை பார்க்கப்பட்டது, 3,000 முறை பகிரப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
July 5, 2025, 12:08 pm