செய்திகள் மலேசியா
வெளிநாட்டு தொழிலாளர்களிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இருப்பதை முதலாளிகள் உறுதி செய்வது அவசியம்: உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
வெளிநாட்டு தொழிலாளர்களிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இருப்பதை முதலாளிகள் உறுதி செய்வது அவசியம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியான் எச்சரித்தார்.
ஜனவரி 14 அன்று ஒரு மின்னணு தொழிற்சாலையில் சமீபத்தில் நடந்த நடவடிக்கை குறித்து இன்று கூலிமில் நடந்த ஒரு நிகழ்வில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
“வெளிநாட்டு தொழிலாளர்களிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள், உரிய விசா அனுமதி இருப்பதை உறுதி செய்யுங்கள். ஜனவரி மாத இறுதியில் மனிதவள அமைச்சகத்துடன் திட்டமிடப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மை கூட்டத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விரிவாக விவாதிப்போம்,” என்று அவர் கூறினார்.
போலி அடையாள ஆவணங்களை வைத்திருந்ததற்கும், மற்றொரு நபரின் ஐசியைப் பயன்படுத்துவதற்கும், குடிவரவுச் சட்டம், வேலைவாய்ப்புச் சட்டம் ஆகியவற்றிற்காகவும் பதிவு விதிமுறைகள் 1990 இன் கீழ் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சிலர் போலி ஆவணங்களுக்கு RM300 செலுத்தியதாக அவர் உறுதிப்படுத்தினார்.
ஆவண மோசடி என்பது ஒரு தீவிரமான பிரச்சினை என்று அவர் வலியுறுத்தினார், "எங்கள் அமைப்பு அத்தகைய துஷ்பிரயோகத்தை அனுமதிக்காது." என்றார் அவர்.
மலேசியாவிற்கு இன்னும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவைப்பட்டாலும், அவர்களின் நுழைவு, மலேசிய சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் அவர்கள் இணங்கி நடந்துகொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
"அரசாங்கத்தின் கடமை அவர்களின் நலனைப் பாதுகாப்பதும், அவர்களை சுரண்டும் முதலாளிகள் அல்லது முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் ஆகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 10:16 am
நெடுஞ்சாலையா அல்லது பந்தயப் பாதையா? ; அதிகரிக்கும் இரவு விபத்து
March 4, 2026, 10:14 am
துர்நாற்றம் வீசிய பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
