நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Homestay குளியலறையில் கேமரா வைத்ததாகச் சந்தேகம்: ஆடவர் கைது

பினாங்கு:

பினாங்கு மாநிலத்தில் 'homestay' எனும் தற்காலிகத் தங்கும் வீட்டிலுள்ள குளியல் அறையில் ரகசியக் கேமரா வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த 20 வயது ஆடவர் கோலாலம்பூரில் கைதுசெய்யப்பட்டார். அவர் விசாரணைக்காக 4 நாள்களுக்குத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை வாயிலாக இதற்குமுன்னர் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட புகாருக்குத் தீர்வு( க் வரக்கூடாது) காண முடியும் என்று காவல்துறை நம்புகிறது.

நடந்தது என்ன?

தாம் தங்கியிருந்த வீட்டின் குளியலறையில் மிகச் சிறிய ரகசியக் கேமரா இருந்ததைப் பெண் ஒருவர் கண்டெடுத்தார். காவல்துறையில் புகாரளித்தார்.

அந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (9 பிப்ரவரி) சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஆடவர் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தவர். கண்டெடுக்கப்பட்ட கேமரா அவரது தொலைபேசியுடன் இணைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

ஆதாரம்: Bernama

தொடர்புடைய செய்திகள்

+ - reset