நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே 2024ஆம் ஆண்டுக்கான இலக்கு: பிரதமர்

கோலாலம்பர் :

பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே 2024ஆம் ஆண்டுக்கான இலக்கு என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பொருளாதார மேம்பாடு, ஊக்கமளிக்கும் முதலீடு ஆகியவை மலேசியாவின் மதிப்பிற்குரிய நாடு என்ற அந்தஸ்தை மீட்டெடுப்பதில் மடானி அரசாங்கத்தின் கவனம் செலுத்துகிறது.

இதை உணர்த்தும் வகையில் கல்வி, சுகாதாரம், கலாசாரம் என அனைத்துத் துறைகளிலும் முதலீட்டை அதிகரிக்கப்பட வேண்டும்.

நாட்டின் திறன்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியில் இந்த ஆண்டு வலியுறுத்தப்பட்டு செயல்படுத்த வேண்டிய பல விவகாரங்களை அமைச்சரவை அமைத்துள்ளது.

அரசியல் நிலைத் தன்மைப்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் எங்கள் திறன்களை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset