நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சியில் எந்தவொரு அணியும்  இல்லை: அஹ்மத் பைசால்

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியில் எந்தவொரு அணியும் இல்லை. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் பைசால் அசுமு கூறினார்.

பெர்சத்து கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கட்சியில் உள்ள முக்கிய தலைவர் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு உளவு பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இக் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. காரணம் கட்சியில் எந்தவொரு பிளவும் இல்லை.

கட்சியின் உச்சமன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்படி ஏதும் பிரச்சினைகள் ஏதும் இருந்திருந்தால் அது சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டிருக்கும்.

உட்கட்சியில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் அப்படித்தான் பேசி தீர்க்கப்படும்.

ஆக மொத்தத்தில் நாங்கள் மக்களுக்காகப் போராடுகிறோம். எங்கள் முக்கிய இலக்கு அதுதான். மக்கள் பிரஞ்சினைகளை முன்னிறுத்தி  கட்சி செயல்படுகிறது.

கெராக்கான் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்லத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம்  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset