நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டிலுள்ளது

பெட்டாலிங் ஜெயா:

இன்று காலை 9 மணி நிலவரப்படி, நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீரான நிலையில் இருக்கின்றது.

இருப்பினும் ஒரு சில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

வடக்கு நோக்கில் செல்லும் பிளாசா டோல் ஜாலான் டுதா, தெற்கு நோக்கி செல்லும்  பிளாசா டோல் சுங்கை பெசி சாலை மற்றும்  

கிழக்கு கடற்கரை திசை நோக்கி செல்லும் கோம்பாக் டோல் பிளாசா ஆகிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ரவாங்கிலிருந்து சுங்கை புயாயா, சிலிம் ரிவரிலிருந்து சுங்காய், பேராக் மற்றும் நீலாயிலிருந்து பண்டார் ஐன்ஸ்டேல் மூலம் சிரம்பான் செல்லும் சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

ஸ்கூடாயிலிருந்து செனாய், கூலாயிலிருந்து சிம்பாங் ரெங்காம் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து மெதுவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கள் காரணமாக சில இடங்களில் வாகனங்கள் மெதுவாக நகர்வதாக X PLUS Trafik-இன் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset