நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழலில் இருந்து விலகி இருங்கள்: போலீசாருக்கு பிரதமர் அறிவுறுத்து

கோலாலம்பூர்:

ஊழலில் இருந்து போலீசார் விலகி இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

நீல சீருடையில் உள்ளவர்கள் உயர் தொழில் நுட்பத்துடன் செயல்பட வேண்டும்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு தேசிய போலீஸ்படைத் தலைவர் ஊழல், அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை கண்டித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், அது ஒட்டுமொத்த காவல்துறையின் மோசமான பிரதிபலிப்பை தருகிறது.

எனவே, நம் நாட்டின் நற்பெயரை மேம்படுத்த முயற்சி செய்ய உங்கள் ஒத்துழைப்பைதான் எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset