செய்திகள் இந்தியா
முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்: அம்னெஸ்டி இண்டர்நேஷனல்
புது டெல்லி:
இந்தியாவில் முஸ்லிம்களின் வீடுகள் சட்டவிரோதமாக இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகளில், இந்தியாவின் 5 மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரத்துக்கு முஸ்லிம்களின் சொத்துகள் இடிக்கப்படுகிறது.
இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பான தண்டனை வடிவில், முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும். இது சட்டத்துக்கு மேல்பட்ட தண்டனையாகும்.
வீடு உள்ளிட்ட சொத்துகள் இடிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் பொதுச் செயலர் ஏக்னெஸ் கேலமார்ட் தெரிவிக்கையில், இந்திய அதிகாரிகளால் முஸ்லிம்களின் சொத்துகள் சட்டவிரோதமாக இடிக்கப்படுவதை புல்டோசர் நீதி என்று அரசியல் தலைவர்களும், ஊடகமும் தெரிவிக்கின்றன.
ஆனால் அந்த நடவடிக்கை குரூரமானது; அதிர்ச்சிகரமானது. இத்தகைய நடவடிக்கையால் முஸ்லிம் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm