![image](https://imgs.nambikkai.com.my/Screenshot_20220411-231831_Twitter-1000x567.jpg)
செய்திகள் இந்தியா
முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்: அம்னெஸ்டி இண்டர்நேஷனல்
புது டெல்லி:
இந்தியாவில் முஸ்லிம்களின் வீடுகள் சட்டவிரோதமாக இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகளில், இந்தியாவின் 5 மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரத்துக்கு முஸ்லிம்களின் சொத்துகள் இடிக்கப்படுகிறது.
இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பான தண்டனை வடிவில், முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும். இது சட்டத்துக்கு மேல்பட்ட தண்டனையாகும்.
வீடு உள்ளிட்ட சொத்துகள் இடிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் பொதுச் செயலர் ஏக்னெஸ் கேலமார்ட் தெரிவிக்கையில், இந்திய அதிகாரிகளால் முஸ்லிம்களின் சொத்துகள் சட்டவிரோதமாக இடிக்கப்படுவதை புல்டோசர் நீதி என்று அரசியல் தலைவர்களும், ஊடகமும் தெரிவிக்கின்றன.
ஆனால் அந்த நடவடிக்கை குரூரமானது; அதிர்ச்சிகரமானது. இத்தகைய நடவடிக்கையால் முஸ்லிம் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm