செய்திகள் மலேசியா
முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; ஒன்றிணைந்து செயல்படுவோம்: கவிமாறன்
போர்டிக்சன்:
நெகிரி செம்பிலான், போர்ட்டிசனில், அரச மலாய் ராணுவ முகாமில் பல ஆண்டுக் காலமாகச் செயல்பட்டு வரக்கூடிய தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்கு ராகா அறிவிப்பாளர் கவிமாறன் சிறப்பு வருகை மேற்கொண்டார்.
இப் பள்ளியில் தரமான வசதிகளோடு மாணவர்கள் தமிழ்க் கல்வி கற்று வருகிறார்கள். 80க்கும் மேற்பட்டமாணவ மாணவிகள் பள்ளியில் படிக்கின்றார்கள். அவர்களுக்கு உணவு உடை மட்டுமின்றிக் கல்வி மேம்பாட்டிற்கானபல பொருட்களும் இலவசமாகவே அந்தப் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகிறது என்பதையும் கவிமாறன் சுட்டிக் காட்டினார்.
ராணுவ பாதுகாப்புடன் பள்ளிக்கூடம் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும் பள்ளியின் வாரிய உறுப்பினர் தகலை ஏற்பாட்டில் அங்குச் செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு தமக்கு ஏற்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலாம் ஆண்டுக்கான பதிவு தொடங்கியிருப்பதால் இப்பள்ளிக்கு அருகில் உள்ள பெற்றோர்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் தாராளமாகச் சேர்க்கலாம் என அழைப்பு விடுத்த கவிமாறன் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் கேட்டுக் கொண்டார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm