நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் வரலாறு பாடத்தின் தேர்வு தாள் கசிந்த விவகாரம் கல்வியமைச்சு விசாரிக்கிறது: ஃபட்லினா

புத்ராஜெயா:

எஸ்பிஎம் வரலாறு பாடத்தின் தேர்வு தாள் கசிந்த விவகாரத்தை கல்வியமைச்சு விசாரித்து வருகிறது.

2023ஆம் ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுக்கான வரலாறு பாடத்தின் தேர்வு தாள் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கல்வியமைச்சு விசாரித்து வருகிறது.

குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

எந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கல்வியமைச்சு விசாரிக்கும். அதே 
நேரத்தில், இந்த செய்தியால் பிள்ளைகளை தொந்தரவு செய்ய வேண்டாம்.

அவர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுத் தாளுடன் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset