நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங்கில் சாலை பகடிவதை: முதியவர் கடுமையாக தாக்கப்பட்டார்

பூச்சோங்:

பூச்சோங்கில் நடந்த சாலை பகடிவதை சம்பவத்தில் முதியவர் ஒருவர்  கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆடவரை கண்டுப்பிடித்து தருமாறு அவரின் பிள்ளை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி தாமான் புத்ரா பிரிமாவில் சாலை பகடிவதைச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 74 வயதுடைய முதியவர் ஆடவர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

இதில் என் அப்பாவுக்கு ஏற்பட்ட காயங்களால் அவரின் முகத்தில் மூன்று எலும்புகள் உடைந்தன. முகம், வாய், தாடை பகுதிகள் மோசமாக தாக்கப்பட்டு வீக்கம் குறையாமல் உள்ளது.

இந்த தாக்குதலால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இச் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆடவர் தலைமறைவாகியுள்ளார்.

தலைமறைவாகி இருக்கும் ஆடவரை கண்டுப்பிடிக்க பொதுமக்கள்  உதவ வேண்டும் என்று அவரின் பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆடவரை தெரிந்தவர்கள் 6011 2121 4397 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset