செய்திகள் மலேசியா
பூச்சோங்கில் சாலை பகடிவதை: முதியவர் கடுமையாக தாக்கப்பட்டார்
பூச்சோங்:
பூச்சோங்கில் நடந்த சாலை பகடிவதை சம்பவத்தில் முதியவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆடவரை கண்டுப்பிடித்து தருமாறு அவரின் பிள்ளை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.
கடந்த ஜனவரி 30ஆம் தேதி தாமான் புத்ரா பிரிமாவில் சாலை பகடிவதைச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் 74 வயதுடைய முதியவர் ஆடவர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதில் என் அப்பாவுக்கு ஏற்பட்ட காயங்களால் அவரின் முகத்தில் மூன்று எலும்புகள் உடைந்தன. முகம், வாய், தாடை பகுதிகள் மோசமாக தாக்கப்பட்டு வீக்கம் குறையாமல் உள்ளது.
இந்த தாக்குதலால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆடவர் தலைமறைவாகியுள்ளார்.
தலைமறைவாகி இருக்கும் ஆடவரை கண்டுப்பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று அவரின் பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆடவரை தெரிந்தவர்கள் 6011 2121 4397 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 1:33 pm
கேசினோ பிரச்சனை தொடர்பான பதிவுகள்: சேகு பார்ட் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
April 30, 2024, 1:31 pm
பொட்டலம் மீது வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தை எழுதிய ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am
கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am
பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am