நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு பணியாளர்களுக்கான புதிய சம்பள ஒப்புதல் அரசு விரைவுப்படுத்தும்: பிரதமர்

புத்ராஜெயா:

அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள திட்டத்திற்கான ஒப்புதலை அரசாங்கம் விரைவுபடுத்தும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொதுச் சேவை ஊதிய முறை குறித்த விரிவான ஆய்வு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு இறுதி ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சம்பளத் திட்டம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக இருந்து வருகின்றது.

ஆகையால், இனி தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இதனால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் துரிதமாக செயல்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சம்பளத் திட்டத்தை வெளியிடுவதற்கான உறுதிப்பாட்டை அரசு கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset