நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய நாட்டினரின் வாடகை விடுதியாக இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை

புத்ராஜெயா:

புத்ராஜெயாவில் அந்நிய நாட்டினரின் வாடகை விடுதியாக இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர்.

இத சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டனர் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

நாட்டில் சட்டவிரோத அந்நிய நாட்டினரை துடைதொழிக்கும் நோக்கில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் புத்ராஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனைகள் நடத்தப்பட்டது.

கிட்டத்தட்ட 47 வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் 127 அந்நிய நாட்டினரிடம் சோதனை நடத்தப்பட்டது.

இதில் 2 பெண்கள் உட்பட 25 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாவர்.

மேலும் கைதானவர்களில் 13 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர்.

3 பாகிஸ்தான், 2 மியன்மார், 1 பிலிப்பைன்ஸ் நாட்டவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset