செய்திகள் மலேசியா
அமான் பாலஸ்தீன் வங்கி கணக்கு முடக்கப்பட்ட விவகாரம்; பிப்ரவரி 27ஆம் தேதி வழக்கு விசாரணை செவிமெடுக்கப்படுகிறது
கோலாலம்பூர்:
அமான் பாலஸ்தீன் வங்கி கணக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சியால் முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து அமான் பாலஸ்தீன் தரப்பு ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைக்கான சட்ட மறுமதிப்பீடு செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தது.
இந்த விண்ணப்பமானது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் எதிர்வரும் பிப்ரவரி 27ஆம் தேதி செவிமெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நீதிபதி அமர்ஜீத் சிங் இந்த தேதியை நிர்ணயித்தார்.
இந்நிலையில் இந்த விண்ணப்பத்தை உடனடியாக நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று அமான் பாலஸ்தீன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரஃபிக் ரஷித் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்தாண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அமான் பாலஸ்தீன் எனும் தொண்டூழிய நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அதிரடியாக முடக்கியது. 70 மில்லியன் ரிங்கிட் நிதியானது தவறாக பயன்படுத்தப்பட்டதாக வெளிவந்த குற்றச்சாட்டு தொடர்பில் எம்.ஏ.சி.சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அத்துடன், 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.ஏ.சி.சி தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm