நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ள அம்னோவுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர்:

ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ள ஒரு சில அம்னோ தொகுதி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அம்னோவும் முன்னாள் தலைவருக்கு அரச மன்னிப்பு கிடைக்கவில்லை.

மாமன்னரின் இந்த முடிவை அனைவரும் மதித்தாலும் பல அம்னோ தொகுதி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

குறிப்பாக அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடியுடன் தொகுதி தலைவர்கள் அண்மையில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது பல அம்னோ தொகுதி தலைவர்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

அதே வேளையில் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து விலகுவது கட்சிக்கு ஆபத்தாகும்.

கட்சி தற்போது நல்ல நிலையில் இல்லை. ஆட்சியில் இருந்து வெளியேறினால் பலத்தையும் பேரம் பேசும் சக்தியையும் இழக்க நேரிடும் என்றும் ஒரு சில தலைவர்கள் கூறியுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset