நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான நிலையமாக மாறிய பள்ளி

குவாந்தான்:

ஆசிரியருக்குப் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளனர் சீனப்பள்ளி மாணவர்கள்.

பகாங் மாநிலத்திலுள்ள தொடக்கப் பள்ளியொன்றில் பணிஓய்வு பெற்ற தலைமையாசிரியருக்கு வித்தியாசமான பிரியாவிடை நிகழ்ச்சிக்கு மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

நிகழ்வின் கருப்பொருள் சுற்றுலா.

அதற்காகப் பள்ளியில், விமான நிலையத்தில் இருப்பதைப் போன்ற அலங்காரங்கள் செய்யப்பட்டன.

ஆசிரியர்களும் மாணவர்களும் விமானி, சிப்பந்திகள் போல உடையணிந்தனர்.

விமான நிலையத்தில் செய்யப்படும் அறிவிப்புகளைப் போன்றே மாணவர்கள் பேசினர். அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டன.

பிரியாவிடை நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு விமான நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு சுற்றுப்பயணத்துக்காக விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானத்துக்குள் ஏறும் வரை பின்பற்ற வேண்டிய ஒவ்வொரு செயல்முறைகளையும் மாணவர்கள் பள்ளியில் உருவாக்கியிருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset