நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக நஜீப்பிற்கு தண்டனை குறைக்கப்பட்டது: பிரதமர் அன்வார் விளக்கம்

புத்ராஜெயா: 

நாட்டிற்கு ஆற்றியப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு மன்னிப்பு வாரியம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு தண்டனையைக் குறைக்க முடிவு செய்துள்ளது என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார். 

மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் இந்த விவகாரத்தைக் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

முதலாவதாக, மேல்முறையீட்டின் அடிப்படை என்ன, அவரது பங்கு, அதற்கு முந்தைய அவரது வாழ்க்கை பயணம், அவரது குடும்பத்திற்கான பங்கு, சிறை வாழ்க்கை, அவரது சேவைகள், சமூகத்திற்கான பங்கு போன்றவற்றை மன்னிப்பு வாரியம் கருத்தில் கொண்டே அவரின் தண்டனை காலத்தைக் குறைத்துள்ளது. 

நஜிப் விவகாரத்தில் மாமன்னரின் முடிவே இறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார். 

பிரதமர் துறை அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset