நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் தண்டனை குறைப்பு; எம்ஏசிசிக்கு கசப்பான அடி: லத்திஃபா

கோலாலம்பூர்:
நஜீப்பின் தண்டனைகள் குறைக்கப்பட்ட விவகாரம் எம்ஏசிசி கசப்பான அடி என்று அதன் முன்னாள் ஆணையர் லத்திஃபா கோயா கூறினார்.

எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமரின் தண்டனைகள் பாதியாக குறைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் எம்ஏசிசிக்கும் அதன் அதிகாரிகளின் மனநிலை எனக்கு நன்றாக புரியும்.

எம்ஏசிசி அதிகாரிகள் அரசு ஊழியர்கள். அதனால் தண்டனை குறைக்கப்பட்டதைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை வெளிப்படுத்த முடியாது.

நஜீப் காலத்தில் 1எம்டிபி விவகாரத்த  விசாரிக்க தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் பணயம் வைத்த எம்ஏசிசி அதிகாரிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டது பெரும் வேதனையை அளித்திருக்கும்.

அதிகாரிகளுக்கும் ஒட்டுமொத்த எம்ஏசிசிக்கும் கசப்பான அடியாக இது அமைந்துள்ளது.

மற்ற நாடுகளில் இருந்து 1எம்டிபிக்கு சொந்தமான நிதியை மீட்பதில் எம்ஏசிசி இன்னும் செயல்பட்டு வருகிறது.

இந்த முயற்சியில் தான் முன்பு ஈடுபட்டதாகவும், அதில் உள்ள சவால்களை புரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார். 

இந்த விவகாரத்தை மற்ற நாடுகள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் இப்போது அவர்கள் ஒத்துழைப்பார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset