நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் விவகாரத்தில் மன்னிப்பு வாரியத்தின் முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள்: ஜோஹாரி கானி

பெட்டாலிங் ஜெயா: 

நஜீப் ரசாக்கின் சிறைத்தண்டனையைக் குறைத்த மன்னிப்பு வாரியத்தின் முடிவை அம்னோ உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் ஜோஹாரி கானி வலியுறுத்தியுள்ளார்.

அம்னோ தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனம் இப்போது கட்சியை வலுப்படுத்தவும் புத்துயிர் பெறவும் வேலை செய்வதில் இருக்க வேண்டும் என்று ஜோஹாரி தெரிவித்துள்ளார். 

அம்னோ தலைவர் அஹம்மத் ஜாஹிட் ஹமிடி மற்றும் கட்சியின் 191 பிரிவு தலைவர்களுக்கு இடையே நடந்த சந்திப்புக் கூட்டத்திற்கு பிறகு அவர் இதனைக் குறிப்பிட்டர். 

அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் கட்சியை வலுவடையும் நோக்கில் செயல்பட வேண்டும். 

2027-ஆம் ஆண்டுக்குள் அம்னோ கட்சி வலுப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset