நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் மன்னிப்பு விரைவுப்படுத்தப்பட்டதா? பிரதமர் விளக்கம்

பெட்டாலிங் ஜெயா: 

நஜீப் ரசாக்கின் அரச மன்னிப்பு விண்ணப்பத்திற்கு மன்னிப்பு வாரியம் முடிவு குறித்துப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கமளித்துள்ளார்.

ஒரு குற்றவாளி தனது மன்னிப்பு விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை அன்வார் மறுத்தார்.

ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர் கொடுக்கப்பட்ட செயல்முறைக்கு ஏற்ப விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்த வழக்கில், மன்னிப்பு வாரியத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

நஜிப்பின் மன்னிப்பு விண்ணப்பம் விரைவுபடுத்தப்பட்டதா என்று கேட்கப்பட்டதற்கு, பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் உடனடி கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதை தாம் பொறுப்பேற்கிறேன் என்று அன்வார் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset