நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பிற்கு முழு மன்னிப்பு கிடைக்க ஜாஹித் அனைத்தையும் செய்தார்: மஸ்லான்

கோலாலம்பூர்:

நஜீப்பிற்கு முழு மன்னிப்பு கிடைக்க அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி அவரால் முடிந்த அனைத்தையும் செய்தார் என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஹ்மத் மஸ்லான் கூறினார்.

எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அரச மன்னிப்பு கோரியிருந்தார்.

ஆனால், அவருக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை. தண்டனை தான் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

நஜீப் விவகாரத்தில் மாமன்னர் எடுத்த முடிவை அம்னோ மதிக்கிறது.

அதே வேளையில் நஜீப்பிற்கு முழு மன்னிப்பைப் பெற ஜாஹித் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்.

மேலும் கட்சி இப்போது மீண்டும் முழு மன்னிப்பைப் பெறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset