செய்திகள் மலேசியா
மிம்காய்ன் விருது விழாவில் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்
கோலாலம்பூர்:
மிம்காய்ன் விருது விழாவில் இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவரும் கோலாலம்பூர் பொருளாதார வர்த்தக மன்றத் தலைவரும் நம்பிக்கை குழுமத்தின் தலைவருமான
டத்தோஶ்ரீ டாக்டர் முஹம்மத் இக்பாலுக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மனிதவளத் துறை துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் அவருக்கு இந்த விருதை வழங்கி சிறப்பு செய்தார்.
மிம்காய்னின் 4ஆவது சிறு தொழில் நடுத்தர வர்த்தக விருது விழா தலைநகரில் மாட்ரேட் மாநாட்டு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிட்டத்தட்ட 31 பேருக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் உச்சக்கட்டமாக நம்பிக்கை குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான டத்தோஶ்ரீ முகம்மது இக்பாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
வர்த்தகம், ஊடகம், அறப்பணி என பல துறைகளில் ஈடுப்பட்டு வரும் டத்தோஶ்ரீ இக்பாலின் சேவையை அங்கீகரிக்கும் நோக்கில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
யூசோப் தைய்யூப் நிறுவன தோற்றுநர் டத்தோஶ்ரீ யூசுப் தையோப், பெர்கேசோ தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ முஹம்மத் அஸ்மான், நஸ்மிர் ஹோல்டிங்ஸ் இயக்குநர் டத்தோ காதர் ஷா, ராம்சல் மீடியோ நிறுவன இயக்குநர் டாக்டர் ராஜா லைலா ராணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இவர்களைத் தவிர்த்து டத்தோ முஹம்மத் ரிஷா, பேராசிரியர் டாக்டர் நிஷாம் ஷா, முகிலன் ராதாகிருஷ்ணன், டத்தோ முஹம்மத் அலி ஜின்னா, டத்தோ ஏபி சிவம், டத்தோ வீரா நைனா முஹம்மத், டத்தோ முஹம்மத் நஸ்ரி, ஹாஜி அப்துல் மாலிக் பாக்கர், ஷேக் ஜமால் அஹ்மத், முஹம்மத் சுபஹான், டத்தோ தமிழ்செல்வம், டத்தோ அப்துல் காதர், முஹம்மத் இஸ்மாயில், ஹைதர் அலி, ஷஃபிக் ரஹ்மான், ஹிதாயா மாஜு அலி ஷாஜஹான், ஜாபர் ஸாடிக், ரியாஸ்கான் அஹ்மத் லத்திப், முஹம்மத் ஹசான், மாரிமுத்து, கோ ஹுன் லுன், சின் யோக் லோங், ராஜமுருகன் நாதன், வெங்கட்டராமன் ஆகியோர் இவ்விழாவில் விருது பெற்றனர்.
விருது பெற்றவர்களுக்கு துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான், மிம்காய்ன் தலைவர் டத்தோ ஜமாருல்கான், துணைத் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 10:30 am
ஆசியான் விசா சுற்றுலா துறையை மேம்படுத்த உதவினாலும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கலாம்
April 29, 2024, 10:08 am
1 எம்டிபி வழக்கு குறித்து முன்னாள் தேசிய வங்கி ஆளுநரிடம் ஏன் விசாரனை நடத்தவில்லை?: புவாட் கேள்வி
April 29, 2024, 9:47 am
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் நோக்கில் ஜோர்டான் பிரதமரை சந்தித்தார் டத்தோஶ்ரீ அன்வார்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm