நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிற்கு இந்திய முஸ்லிம் சமுகத்தினர் மிகவும் முக்கியமானவர்கள்: டத்தோ அப்துல் ரஹ்மான்

கோலாலம்பூர்:

நாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் மிகவும் முக்கியமானவர்கள்.

மனிதவளத் துறை துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் இதனை கூறினார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனமான மிம்காய்னின் சிறு தொழில் நடுத்தர வணிகர்களுக்கான விருது விழாவில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ  ஜாஹிட் ஹமிடி தலைமையேற்க வேண்டும்.

சில அவசர அலுவல் காரணமாக இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் என்னை பணித்தார்.

இந்நிலையில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அப்போது அவர் மிம்காய்ன் விருது விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

மிம்காய்னும் அதில் கலந்து கொள்ளும் வர்த்தகர்களும் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள்.

அவர்களை ஒருபோதும் நாம் புறக்கணிக்கக் கூடாது என அவர் என்னை வலியுறுத்தினார்.

அதே வேளையில் கடந்த காலங்களில் நடந்த விழாவில் துணைப் பிரதமர் கண்டிப்பாக கலந்துக் கொண்டுள்ளார்.

இது தான் இந்திய சமுதாயத்தின் சேவைக்கும் துணைப் பிரதமரும் அரசாங்கமும் வழங்கும் அங்கீகாரமாகும்.

இதன் அடிப்படையில் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டேன். விருது பெறும் வணிகர்களுக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் இந்திய முஸ்லிம் சமூகம் நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

குறிப்பாக அரசாங்கத்திற்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset