செய்திகள் மலேசியா
நாட்டிற்கு இந்திய முஸ்லிம் சமுகத்தினர் மிகவும் முக்கியமானவர்கள்: டத்தோ அப்துல் ரஹ்மான்
கோலாலம்பூர்:
நாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் மிகவும் முக்கியமானவர்கள்.
மனிதவளத் துறை துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் இதனை கூறினார்.
மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனமான மிம்காய்னின் சிறு தொழில் நடுத்தர வணிகர்களுக்கான விருது விழாவில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடி தலைமையேற்க வேண்டும்.
சில அவசர அலுவல் காரணமாக இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் என்னை பணித்தார்.
இந்நிலையில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போது அவர் மிம்காய்ன் விருது விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
மிம்காய்னும் அதில் கலந்து கொள்ளும் வர்த்தகர்களும் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள்.
அவர்களை ஒருபோதும் நாம் புறக்கணிக்கக் கூடாது என அவர் என்னை வலியுறுத்தினார்.
அதே வேளையில் கடந்த காலங்களில் நடந்த விழாவில் துணைப் பிரதமர் கண்டிப்பாக கலந்துக் கொண்டுள்ளார்.
இது தான் இந்திய சமுதாயத்தின் சேவைக்கும் துணைப் பிரதமரும் அரசாங்கமும் வழங்கும் அங்கீகாரமாகும்.
இதன் அடிப்படையில் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டேன். விருது பெறும் வணிகர்களுக்கு எனது வாழ்த்துகள்.
மேலும் இந்திய முஸ்லிம் சமூகம் நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.
குறிப்பாக அரசாங்கத்திற்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 10:30 am
ஆசியான் விசா சுற்றுலா துறையை மேம்படுத்த உதவினாலும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கலாம்
April 29, 2024, 10:08 am
1 எம்டிபி வழக்கு குறித்து முன்னாள் தேசிய வங்கி ஆளுநரிடம் ஏன் விசாரனை நடத்தவில்லை?: புவாட் கேள்வி
April 29, 2024, 9:47 am
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் நோக்கில் ஜோர்டான் பிரதமரை சந்தித்தார் டத்தோஶ்ரீ அன்வார்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm