நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் விவகாரத்தில் வீண் கருத்துகள் வேண்டாம்; நடவடிக்கை எடுக்கப்படலாம்: ஃபாஹ்மி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் விவகாரத்தில் வீண் கருத்துகளை வெளியிட வேண்டாம்.

அப்படி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் ரசாக் அரச மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

நஜிப் ரசாக்கிற்கான மன்னிப்பு வாரியத்தின் முடிவு குறித்து சமூக ஊடகங்கள் உட்பட கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும்.

அனைத்துத் தரப்பினரும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேன்டும்.

இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரமும் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு உண்டு.

ஆகையால் இந்த விவகாரம் தொடர்பில் கருத்துகளை வெளியிட வேண்டாம். 

இதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று ஃபாஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset