நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் மன்னிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தோல்வி: சைட் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

நஜீப் மன்னிப்பு விவகாரத்தில் அரசாங்கம் அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சித்துள்ளது.

ஆனால் அதில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராஹிம் கூறினார்.


நஜீப்பிற்கு முழு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்து.

அதே வேளையில் அவர் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது ஒரு தரப்பு விரும்புகிறது.

இதில் அனைவரையும் திருப்திப்படுத்தும் நோக்கில், நஜீப்பின் தண்டனை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முயற்சியில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது.

மன்னிப்பு வாரியத்தின் முடிவை மதித்தாலும் அது பலருக்கு ஏமாற்றம் என்று சைட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset