செய்திகள் மலேசியா
மாமன்னரின் முடிவை மதிக்கிறோம்; நஜீப்பிற்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகள் தொடரும்: அம்னோ
கோலாலம்பூர்:
நஜீப் விவகாரத்தில் முன்னாள் மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவின் முடிவை அம்னோ மதிக்கிறது.
அதே வேளையில் நஜீப்பிற்கான நீதி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அம்னோ மேற்கொள்ளும்.
எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டத்தோஶ்ரீ நஜீப் அரச மன்னிப்பு கோரியிருந்தார்.
ஆனால் அவருக்கு அரச மன்னிப்பு வழங்கப்படவில்லை. மாறாக அவரின் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கும் நோக்கில் அம்னோ உச்சமன்றம் கூடியது.
இக்கூட்டம் பல மணி நேரங்கள் நடந்தது. அக்கூட்டத்திற்கு பின் அம்னோ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் நஜீப் விவகாரத்தில் அரச மன்னிப்பு வாரியம், முன்னாள் மாட்சிமை தங்கிய மாமன்னரின் முடிவை அம்னோ வரவேற்கிறது.
அதே வேளையில் அம்னோ இந்த முடிவால் வருத்தமடைந்துள்ளது.
அம்னோ நாட்டின் சட்டங்களின்படி கட்சியின் முன்னாள் தலைவர் நஜீப் பெறுவதற்கான தனது முயற்சிகளைத் தொடரும்.
மேலும் நஜீப்பைத் தொடர்ந்து காக்க கடந்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm