செய்திகள் மலேசியா
21 புதிய தொழில் துறை வாய்ப்புகள் இந்திய சமுதாயம் பயன் பெற வேண்டும்: டத்தோஸ்ரீ இக்பால்
கோலாலம்பூர்:
அரசாங்கத்தின் 21 தொழில் துறை வாய்ப்புகளை இந்திய சமுதாயம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோலாலம்பூர் பொருளாதார வர்த்தக மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் இதனை வலியுறுத்தினார்.
2030ஆம் ஆண்டுக்கான தொழில் துறை உருமாற்ற மாஸ்டர் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகம் செய்துள்ளார்.
இதில் 21 புதிய வர்த்தக தொழில் துறைகள் அறிமுகம் காணப்பட்டுள்ளது.
இந்த தொழில் துறைகள் அனைத்தும் பெரிய வர்த்தகர்களுக்கு அல்ல. மாறாக சிறு நடுத்தர வர்த்தகர்களுக்கு பெரிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
ஆகவே, இவ்வாய்ப்புகளை இந்திய சமுதாயம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ இக்பால் கூறினார்.
நாட்டில் உள்ள சிறு நடுத்தர வர்த்தகர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக, அசரசாங்கத்தின் திட்டங்கள் அவர்களை சென்றடைவது இல்லை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுப்பது இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கு துணையமைச்சர் டத்தோ ரமணன் தீர்வு காண வேண்டும்.
இதுவே எங்களின் கோரிக்கை என்று டத்தோஸ்ரீ இக்பால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm