செய்திகள் மலேசியா
அனைத்து தொழில் துறைகளிலும் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரிக்க வேண்டும்: டத்தோ ஜமருல் கான்
கோலாலம்பூர்:
நாட்டில் அனைத்து தொழில் துறைகளிலும் இந்தியர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துங்கள் என்று மிம்கோய் தலைவர் டத்தோ ஹாஜி ஜமருல் கான் கூறினார்.
கடந்த காலங்களில் இந்தியர்கள், குறிப்பாக இந்திய முஸ்லிம் சமுதாயம் பல தொழில் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனால், கால ஓட்டத்தில் பல தொழில் துறைகள் நம்மை விட்டு விலகிக் சென்று விட்டன.
நமது வர்த்தகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் தோல்வி காண்பதுதான் இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
ஆகவே, நமது தொழில் துறைகள் அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்.
இதன் மூலம் அனைத்து தொழில் துறைகளிலும் நமது சமுதாயம் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
மிம்காய்ன் வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய டத்தோ ஜமாருல்கான் மேற்கண்டவாறு கூறினார்.
மிம்காய்ன் இந்திய முஸ்லிம் வர்த்தக சபையாக இருந்தாலும் கூட ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் வர்த்தகத்தில் சாதிக்க வேண்டும் என்று நோக்கில் இந்த வர்த்தகமான மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
குறிப்பாக நாட்டில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் இந்த சமுதாயத்தை சென்றடைய வேண்டும் என்பதே இந்த மாநாட்டு நடத்தப்படுகிறது.
இன்று இரவு துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தலைமையில் வர்த்தக விருது விழாவும் நடைபெறவுள்ளது.
வர்த்தகத்தில் சாதித்தவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருது விழா நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm