நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து தொழில் துறைகளிலும் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரிக்க வேண்டும்: டத்தோ ஜமருல் கான்

கோலாலம்பூர்:

நாட்டில் அனைத்து தொழில் துறைகளிலும் இந்தியர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துங்கள் என்று மிம்கோய் தலைவர் டத்தோ ஹாஜி ஜமருல் கான் கூறினார்.

கடந்த காலங்களில் இந்தியர்கள், குறிப்பாக இந்திய முஸ்லிம் சமுதாயம் பல தொழில் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால், கால ஓட்டத்தில் பல தொழில் துறைகள் நம்மை விட்டு விலகிக் சென்று விட்டன.

நமது வர்த்தகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் தோல்வி காண்பதுதான் இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

ஆகவே, நமது தொழில் துறைகள் அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்.

இதன் மூலம் அனைத்து தொழில் துறைகளிலும் நமது சமுதாயம் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

மிம்காய்ன் வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய டத்தோ ஜமாருல்கான் மேற்கண்டவாறு கூறினார்.

மிம்காய்ன் இந்திய முஸ்லிம் வர்த்தக சபையாக இருந்தாலும் கூட ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் வர்த்தகத்தில் சாதிக்க வேண்டும் என்று நோக்கில் இந்த வர்த்தகமான மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்பாக நாட்டில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் இந்த சமுதாயத்தை சென்றடைய வேண்டும் என்பதே இந்த மாநாட்டு நடத்தப்படுகிறது.

இன்று இரவு துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தலைமையில் வர்த்தக விருது விழாவும் நடைபெறவுள்ளது.

வர்த்தகத்தில் சாதித்தவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருது விழா நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset