நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய தண்ணீர் கட்டணத்தை பேரா அரசு அடுத்த மாதம் அறிவிக்கும்

ஈப்போ:

புதிய தண்ணீர் கட்டணத்தை பேரா அரசு அடுத்த மாதம்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

இதனை பேரா மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ சாரணி முகமத் கூறினார்.

தீபகற்ப மலேசியா, லாபுவானில் தண்ணீர் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பேரா மாநிலத்தின் புதிய தண்ணீர் கட்டணம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

மார்ச் 1 ஆம் தேதி பேராக் நீர் வாரியத்தின் (எல்ஏபி) இயக்குநர்கள் குழுவை தனது தரப்பு சந்திக்கும்.

அதன் பின் அது மாநில அரசின் ஆட்சிக் குழு கூட்டத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வரும்.

ஆட்சிக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset