நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தடுப்பு முகாமில் இருந்து தப்பியோடிய அந்நிய நாட்டினர்: விபத்தில் ஒருவர் பலி

பீடோர்:

தடுப்பு முகாமில் இருந்து அந்நிய நாட்டினர் தப்பியோடிய விவகாரத்தில்  ஒருவர் விபத்தில் பலியானார்.

கைதாகும் அந்நிய நாட்டினர் பீடோரில் உள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அம்முகாமில் இருந்த 131 சட்டவிரோத அந்நிய நாட்டினர் தப்பியோடினர்.

115 ரோஹின்யா, 16 மியன்மார் நாட்டினர் ஆகியோர் தப்பியோடியுள்ளனர்.

அப்போது ஆடவர் ஒருவர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளானார். 

பலத்த காயங்களுக்கு இலக்கான அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் முகமத் நைம் அஸ்னாவி கூறினார்.

தப்பியோடியவர்களை தேடும் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset