நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகங்கள் வழி போலி கைது ஆணை- பொது மக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை

கோலாலாம்பூர்:

வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகக் கைது ஆணையை அனுப்பும் மோசடிக் கும்பலின் புதிய அணுகுமுறையை அரச மலேசியக் காவல்படை அடையாளம் கண்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் துணை இயக்குநர் டத்தோ ரோஹாய்மி முஹமத் ஈசா கூறினார்.

வர்த்தக குற்றப்புலனாய்வத் துறையின் பி-19 குழுவின் சிறப்புப் பிரிவு எனும் தலைப்பிலான அந்தக் கைது ஆணை புத்ரா ஜெயாவிலுள்ள கூட்டரசு நீதிமன்ற தலைமைப் பதிவாதிகாரி அலுவலகத்தின் முகவரியைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச மலேசியக் காவல் துறையால் அனுப்பப்படும் தோற்றத்தைக் கொண்ட அந்தக் கைது ஆணை, குறிப்பிட்ட குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட நபரை 24 மணி நேரத்தில் தடுத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆணையை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் காவல்துறைக்கு வழங்கியுள்ளதாகவும் கைது செய்யப்படும் நபரை வழக்கறிஞர் உள்பட எந்தத் தரப்பினரின் மூலமாகவும் ஜாமீன் எடுக்க இயலாது என்றும் அந்தக் கைது ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டப் பின்னர் அவரின் பெயரிலுள்ள சொத்துகள் முடக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்படும் என்பதோடு நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட மாட்டார் என்று அதில் கூறப்பட்டிருப்பதாக டத்தோ ரோஹாய்மி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். 

இத்தகைய கைது ஆணை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்திய அவர், இது புதிய பாணியிலான மோசடி நடவடிக்கையாக விளங்குகிறது என்றார்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் இத்தகைய தகவல்கள், அறிமுகமில்லாத நபர்களின் தொலைபேசி அழைப்புகளைப் பின்பற்ற வேண்டாம் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset