நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில இடைக்கால சுல்தானாக துங்கு இஸ்மாயில் பொறுப்பேற்றார்

ஜொகூர்பாரு:

ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் ஜொகூர் மாநிலத்தின் இடைக்கால சுல்தானாக பொறுப்பேற்றார்.

புக்கிட் செரேனே அரண்மனையில் இன்று காலை சுல்தான் இப்ராஹிம் முன் இப் பதவியேற்பு விழா நடந்தது.

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் நாட்டின் 17ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னராக பொறுப்பேற்கவுள்ளார்.

மாட்சிமை தங்கிய மாமன்னருக்கான பதவிக் காலம் முடியும் வரை துங்கு இஸ்மாயில் ஜொகூர் மாநிலத்தின் சுல்தானாக பதவி வகிக்கவுள்ளார்.

குறிப்பாக ஜொகூர் மாநில ஆட்சியாளராக அவர் பொறுப்பேற்பார் என்று ஜொகூர் அரச மன்றத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரஹிம் ரம்லி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset