நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாநிலங்களில் இன்னமும் 1,684 பேர்  வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்:

நான்கு மாநிலங்களில் இன்னமும் 1,684 பேர்  வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நாட்டில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதில் திரெங்கானு, பகாங், கிளந்தான், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை வரை 1,684 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19 வெள்ள நிவாரணை மையங்களில் தங்கியுள்ளனர்.

திரெங்கானுவில் ஆக அதிகமாக 1,378 பேர் 14 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

ஜொகூர் மாநிலத்தில் 235 பேரும் கிளந்தானின் 43 பேரும் பகாங்கில் 28 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset