நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேமரன்மலை நிலச்சரிவில் சிக்கியிருந்த கடைசி 2 உடல்கள் மீட்கப்பட்டன

கேமரன்மலை:

கேமரன்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கடைசி இருவரின் உடல்கள் நேற்று மாலை மீட்கப்பட்டன.

கேமரன்மலை போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி இதனை உறுதிப்படுத்தினார்.

கேமரன்மலை புளூவேலியில் நிகழ்ந்த நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடலை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் நான்காவது நபரின் உடல் மாலை 6.10 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது.

அதே வேளையில் கடைசி நபரின் உடல் மாலை 6.50 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது.

பலியானவர்கள் ஷிங் லா ஹர் (வயது 56), ஓம் மியூ (வயது 37) என அடையாளம் காணப்பட்டது.

இதன் மூலம் இந்த நிலச்சரிவில் மொத்தம் 5 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset