செய்திகள் மலேசியா
அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாட்டை சிறப்பாக வழிநடத்தினார் மாமன்னர்: பிரதமர்
கோலாலம்பூர்:
பல அரசியல் குழப்பங்களுக்கு மத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் பில்லா ஷா நாட்டை சிறப்பான முறையில் வழிநடத்தினார்.
இவ்வேளையில் அவருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நீண்ட கால அரசியல் உறுதியற்ற தன்மை, கோவிட்-19 தொற்று நோயின் பரவல், மாறிவரும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றில் நாடு சிக்கியது.
குறிப்பாக நாடு நிச்சயமற்ற தன்மையிலும் நெருக்கடியிலும் தள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், எந்த சூழ்நிலையிலும் அமைதி, நல்வாழ்வு முன்னுரிமையாக இருப்பதை உறுதிசெய்வதற்காக மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் உயர்ந்த குணங்களை உள்ளடக்கிய தலைமைத்துவத்தின் பொறுப்புகளை மாமன்னர் முழுமையாக நிறைவேற்றினார்.
சுல்தான் அப்துல்லாஹ்வின் பதவிக்காலம் நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்தது.
மூன்று பிரதமர்களின் மாற்றங்கள் மூலம் அரசாங்கம் சோதிக்கப்பட்டது. திறமையான தலைமைத்துவம், சாதாரண நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட தியாகம் தேவை என்றும் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am