நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண்ணீர் மல்க விடைபெற்ற மாட்சிமை தங்கிய மாமன்னர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாஹ் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி நேற்று  இரவு நடந்த அரச விருந்தில் பேசிய போது கண்ணீர் விட்டு அழுதார்.

சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் பில்லா ஷா தன்னை மன்னராகவும், துங்கு அஜீசாவை அரசியாக ஏற்றுக் கொண்ட அனைத்து மலேசியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இயற்கையாகவே, தொடங்கும் அனைத்தும் முடிவடைய வேண்டும். ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு பிரிவு இருக்க வேண்டும். 

எனவே, நானும் அரசியாரும் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பதவிக் காலத்தில் என்னால் இயன்ற நல்லவற்றை  நிறைவேற்றியதால் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மகிழ்ச்சியுடன் பகாங் மாநிலத்தித்திற்கு புறப்படுவேன் என்று மாமன்னர் கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி  நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் 16ஆவது மாமன்னராக சுல்தான் அப்துல்லாஹ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

எதிர்வரும் ஜனவரி 31 அன்று ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset